Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, July 1, 2015

நானும் எனது பேனாவும்










எனது  பேனா
நடந்து  வந்தது….
மலர்கள்   மீதல்ல…
முட்களின்  கற்களின்..
முற்றுகையில்..
உதித்து  வந்தது.
  ---------------
எனது..
கவிதைகள்  சிறகு
கட்டிப்பறந்தவையல்ல…
காலத்தின்
அடிச்சுவட்டில்
அத்தாட்சிப்பெற்றவை.
  ---------------
பிரிக்கப்பட்ட
யுகத்திலிருந்து..
புதைக்கப்பட்ட
மடைமைகளுக்கு—கொடியேற்றம்
செய்யும் -- எனது
பேனாவின்--எண்ணங்கள்
காதலால்…
அலங்கரிக்கப்பட்டவையல்ல.
அனுபவக்  கோர்வைகளால்
ஜனனமானவை.
   -----------
எனது—பேனாவின்
மொழிகளில்---போலி
ஒப்பனையில்லாத..
போராட்டம்--
சத்தமில்லாமல்
சத்தியாக்கிரகம் பண்ணும்.
   -----------
இரவின்  இதயத்தில்
நீண்ட  பொழுதினைக்
கொண்டிருக்கும்..
என்  பேனா
பகலின்  பள்ளியெழுச்சில்
சமுதாயப் பயணத்தில்
சங்கமமாகும்.
   ------------

எனது பேனாவின்
சிந்தனையைத்
தட்டிக்கொடுக்கும்
எனது  விரல்கள்
விடியலின்  விரல்கள்.

பாத்திமா நளீரா – வீரகேசரி வார வெளியீடு -  June 28th 2015

0 comments:

Post a Comment