எனது பேனா
நடந்து வந்தது….
மலர்கள் மீதல்ல…
முட்களின் கற்களின்..
முற்றுகையில்..
உதித்து வந்தது.
---------------
எனது..
கவிதைகள் சிறகு
கட்டிப்பறந்தவையல்ல…
காலத்தின்
அடிச்சுவட்டில்
அத்தாட்சிப்பெற்றவை.
---------------
பிரிக்கப்பட்ட
யுகத்திலிருந்து..
புதைக்கப்பட்ட
மடைமைகளுக்கு—கொடியேற்றம்
செய்யும் -- எனது
பேனாவின்--எண்ணங்கள்
காதலால்…
அலங்கரிக்கப்பட்டவையல்ல.
அனுபவக் கோர்வைகளால்
ஜனனமானவை.
-----------
எனது—பேனாவின்
மொழிகளில்---போலி
ஒப்பனையில்லாத..
போராட்டம்--
சத்தமில்லாமல்
சத்தியாக்கிரகம் பண்ணும்.
-----------
இரவின் இதயத்தில்
நீண்ட பொழுதினைக்
கொண்டிருக்கும்..
என் பேனா
பகலின் பள்ளியெழுச்சில்
சமுதாயப் பயணத்தில்
சங்கமமாகும்.
------------
எனது பேனாவின்
சிந்தனையைத்
தட்டிக்கொடுக்கும்
எனது விரல்கள்
விடியலின் விரல்கள்.
பாத்திமா நளீரா – வீரகேசரி வார வெளியீடு - June 28th 2015
0 comments:
Post a Comment