வானிலிருந்து
ஒற்றைச் சிறகுடன்
மண்ணில் வீழ்ந்த
என்னை.....
மனிதப் பறவைகள்
பந்தாட...
என் இதயமோ
துடிதுடித்தது.
என்னைக் கூறுபோட்டு
கொன்றதற்காக...அல்ல
வானிலிருந்த பறவைகள்...
என்--
மற்றைய சிறகுடன்
வட்டமிட்டு
கதறிக் கொண்டிருந்தன.
----பாத்திமா நளீரா------
0 comments:
Post a Comment