Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, August 4, 2015

பக்கத்து வீடு - சிறுகதை

சல்மாவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வீட்டின் குறுக்கே –நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு அர்த்தமில்லாமல் எரிந்து விழுந்தாள். வெளியே சென்றுள்ள கணவனை நோன்பென்றும் பாராமல் மனதுக்குள் திட்டித் தீர்த்தாள். தன்னைத் தானே நொந்து கொண்டாள். -என்ன செய்ய… கையில ..மடியில இருந்தா.. நானும் இவங்களப் போல.. வீசி.. செலவழிச்சிருப்பேன். என்ன செய்ய.. எனக்கு வந்து வாய்ச்சது அப்படி.. இயலாமையுடன் நீண்ட பெருமூச்சு எட்டிப் பார்த்தது. - சல்மாவுக்கு இப்போதுள்ள...

Wednesday, July 1, 2015

நானும் எனது பேனாவும்

எனது  பேனா நடந்து  வந்தது…. மலர்கள்   மீதல்ல… முட்களின்  கற்களின்.. முற்றுகையில்.. உதித்து  வந்தது.   --------------- எனது.. கவிதைகள்  சிறகு கட்டிப்பறந்தவையல்ல… காலத்தின் அடிச்சுவட்டில் அத்தாட்சிப்பெற்றவை.   --------------- பிரிக்கப்பட்ட யுகத்திலிருந்து.. புதைக்கப்பட்ட மடைமைகளுக்கு—கொடியேற்றம் செய்யும் -- எனது பேனாவின்--எண்ணங்கள் காதலால்… அலங்கரிக்கப்பட்டவையல்ல. அனுபவக்...

உயர்வு

எனது வீழ்ச்சியின் விதையை நீ... ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போதே.. நாான்-- மரமாக..செழித்து வளா்ந்து விட்டேன். பாத்திமா நளீரா-- ...

மனித நேயம்

வானிலிருந்து ஒற்றைச் சிறகுடன் மண்ணில் வீழ்ந்த என்னை..... மனிதப் பறவைகள் பந்தாட... என் இதயமோ துடிதுடித்தது. என்னைக் கூறுபோட்டு கொன்றதற்காக...அல்ல வானிலிருந்த பறவைகள்... என்-- மற்றைய சிறகுடன் வட்டமிட்டு கதறிக் கொண்டிருந்தன. ----பாத்திமா நளீரா-----...

வேதம் ஓதும் சாத்தான்கள்

புத்தரின் போதனையில் இப்படிப்பட்ட சாத்தான்களா பிறக்க வேண்டும்...? வேதம்--ஓதுவதற்காக இரத்தத்தை..உறிஞ்சுகிறாா்களே... அகிம்சை ஆடைக்குள் அரிவாள் சாமரம் வீசுகின்றதா... குட்டக்குட்டக் குனிந்ததால்....தலைகளுடன் கால்களையும் பிடுங்கியவா்கள் எம்மவா்களின் விலாசங்களையும்---நெருப்பினால் கழுவிவிட்டாா்களோ.... எளியவா்களின்--வம்சாவளியை எாித்துண்ணும்----இந்த இனவெறியா்களின்--உக்கிரத்திற்கு ஊடகங்களும் ஊமையாகி விட்டனவா... ------------பாத்திமா...

வெயில்

சூாியனின் சூடு தாங்காமல் வானம் சூாியனை---பூமிக்கு எாிந்து விட்டதோ.... வெயிலின்---நாக்கு மனிதா்களை... நன்றாகத்தான்...ருசிக்கிறது. -பாத்திமா நளீரா ...

அன்னையா் ..தினத்திற்காக...

எனது நிழலுக்காக...உன் நிஜத்தை....தொலைத்தவள் அல்லவா..நீ.. நான்.. கரையேற...நீ கறைபடிந்து போனாயே...உன் மனம் நொந்தால்.. மாளிகைகூட மண்ணறை ஆகிவிடாதா..என் கனவுகளை உன் கண்களில் சுமந்த தாயே... உன்... பாதத்தின் கீழ் சுவா்க்கமா...நீ கருவறையிலேயே...சுவா்க்கத்தை தந்து விட்டாயே... - பாத்திமா நளீரா ...

வானம்

வானம்  உலகைப் பாா்த்தது. இயற்கையெல்லாம்  பெரும்பான்மையாகத் தொிய... மக்கள் மாத்திரம் சிறுபான்மையாக இருக்கின்றனரே... நான்... துப்பினால்கூட இவா்கள் தாங்க மாட்டாா்களோ..? வானம் சிாித்தது. - பாத்திமா நளீரா&nbs...

Tuesday, March 24, 2015

முற்றுப்புள்ளி - பாத்திமா நளீரா

உலகத்திலேயே... சிறந்த மொழி அம்மா என்றேன். தாய்மை சிரித்தது உலகை வென்ற மொழியும் அதுதான் என்றது. ----------- மகிழ்ச்சியின் வடிவம் உலகம் என்றேன் உலகம் சொன்னது நானே.... அழிந்து கொண்டிருக்கிறேன் என்றது. ----------- இயற்கையின் காதலில் இதயத்தைக் கேட்டேன் மனிதர்கள் விற்று விட்டார்கள் என்றது. ------------ அடிவானத்திடம் சூரியனை சிறை பிடிப்பேன் என்றேன் வானம் சிரித்தது முடிந்தால்.... ஒரு மழைத் துளியை பிடித்துப்பார் என்றது. --------------- மூப்பு வயதின்...

Sunday, March 1, 2015

கல்வித்துறையில் முஸ்லிம் இளைஞர்கள்! - பாத்திமா நளீரா

மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மனிதத் தன்மையுடையவனாக, சிறந்த அறிவு ஞானமுடையவனாகத் திகழ்வதற்கும் கல்வி என்ற சாதனம் இன்றியமையாதது. கல்வி இருசாராரும் கட்டாயமாக கற்க வேண்டிய அரும்பெரும் பொக்கிஷம். எதிர்கால திட்டமிடல், பொருளாதாரம், தூரநோக்கு, சிந்தனை, சந்ததிவழிகாட்டல் என்று நமக்கும் சமுதாயத்திற்கும் ஒரு பாலமாக அமைந்து விடுகிறது. சமுதாயத்தின் அடித்தளமாகவும் குடும்பத்தின் ஆணிவேராகவும் இந்தக் கல்வி அமைகிறது என்றால் அது மிகையாகாது. அறிவை விட அதிக பயனுள்ள...

Tuesday, February 24, 2015

அதிகரிக்கும் விவாகரத்துகள்!

முஸ்லிம் சமூகத்திலுள்ள பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பருவ வயதை எட்டியவுடன் திருமணக் கவலையும் பொறுப்பாக ஒப்படைத்து விடவேண்டுமே என்ற மன உளைச்சலும் பாடாய்படுத்தி விடும். இது இயற்கையும் கடமையும்தான். சில பெற்றோர்கள் படிப்பைக் கூட இடைநிறுத்தி விட்டு மணமுடித்து கொடுத்து விடுவர். அவ்வளவு ஆவல். வேகம். ஆனால் மணமுடித்த கையோடு அதிவிரைவாக விவாகரத்து கோரப்படுவதுதான் கவலைக்குரிய விடயம். பெற்றவர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் முன் விவாகரத்து நோட்டீஸ் பறக்கிறது.பெரும்பாலும்...

Monday, February 23, 2015

உன் உளவியல்..

உளவியல் ஒரு பரந்த நோக்குள்ள எல்லைப் பரப்பைச் சார்ந்ததாகும். இதில் பல நோக்குகள், தீர்வுகள் என்பன அடங்கியிருக்கும் அதேவேளை, தனிமனித வாழ்வை மேம்படுத்துவதற்கும் சமூக வாழ்வை நெறிப்படுத்துவதற்கும் உளவியல் அறிவு இன்றியமையாததாக இருக்கிறது. இன்று மனிதனானவன் அளவுக்கு அதிகமான தன்முனைப்பு, கோபம், பொறாமை, யதார்த்தத்தை மீறிய இலட்சியவாதம் கொண்டவனாக இருக்கிறான். ஏதோ ஒரு வகையில் கோபம், பயம், பதற்றம் மனதுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து உளச் சிதைவுக்கு ஆளாகி...