Fathima Naleera. Powered by Blogger.

Thursday, August 21, 2014

ஒருநாள் ஊன்றுகோல் கேட்பார்கள்! --பாத்திமா நளீரா













அன்று...
யூதர்களின்..
இரவோடு இரவு
மகாநாட்டின் முடிவின்
வெளிச்சம்!
இன்று
உலகின் மையம்
பலஸ்தீன் இருளானது
========================
அன்றைய
பலஸ்தீனின்
சுதந்திர சுவர்க்கம்
இன்று
இஸ்ரேலிடம் நரகமாய்
தகிக்க...
நெளியும்
யுத்த நாகங்களை
காவல் காக்கும்
அரபு நாடுகளுக்கு
சர்வதேச ஏகாதிபத்தியின்
“புரிந்துணர்வு பட்டம்“
படுக்கையை அலங்கரிக்கிறது.
========================

முத்துக்கள்..
சொத்துக்கள்...
வித்துக்கள் – எல்லாம்
மில்லியன் குண்டுகளால்
சுத்தமாய் சுடுகாடாக
ஐரோப்பாவின்
சில்லறைகளுக்கு – இன்னும்
சில்லறை புத்திதான்.
========================
பால் கொடுக்க
தாயும் இல்லை...
பால் குடிக்க
பாலகனும் இல்லை.
புத்தகத்தை சுமக்காத
சிறுவர்கள்..
யுத்தத்தைச் சுமக்க..
அவலங்களின்
உயிர்நாடியை
அதிகார வர்க்கம்
குதறிக் கொண்டிருக்கிறது.
========================
இந்த சாத்தான்களின்
விஷம் – என்ற
வேதம்
ஊளையிட்டதால்
ஜனாஸாக்கள் கூட
பிணையில்
செல்ல முடியாமல்
அழுகின்றன.
========================
உலக வரைபடத்தில்
இல்லாத நாட்டை
உருவாக்கியர்களின்
உருவங்கள் – ஒருநாள்
அழியும் – முடிவில்
உள நோய்க்கும்
ஊன்றுகோல் கேட்பார்கள்
(விடிவெள்ளி 21-08-2014) 

0 comments:

Post a Comment