Fathima Naleera. Powered by Blogger.

Sunday, April 11, 2010

மரணம்.. - பாத்திமா நளீரா


இறைவனின்
இறுதி எச்சரிக்கை.
மறுமைக்கான
மறு அழைப்பு.

சிறைப்பட்ட வயதுக்கும்
திணறும் நாட்களுக்கும்
தீ வைத்தாலும்
மரணம் உயித்தெழும்.

தேகங்கள்
தேசாந்திரம் சென்றாலும்
பூஜ்ஜியமாகும்
பிரபஞ்ச பிரேதத்தை
மரணம்
தழுவிக் கொள்ளும்.

விதியின் முன்னால்
விஞ்ஞானிகளின்
சிந்தை கூட
சிசுவாகிறது.

வாழ்க்கைக்கு
முத்திரையிட்ட- இந்த
மரண முத்தங்கள்
மானிட இதயங்களுக்கு
நல்ல சிகிச்சை.

வாழ்க்கையின்
முடிவுரைக்கும்
மயானத்தின்
முன்னுரைக்கும்
அணிந்துரை எழுதும்
விதியின் கைகளுக்கு- யார்
விலங்கிட முடியும்?

ஆசைகளையும்
அதிகாரங்களையும்
ஆட்சி செய்யும்-மானிட
வர்க்கத்தின் - உயிரை
ஆட்சி செய்யும்
விதியின் விலாசமே
நிரந்தரமான நிஜம்.

வினாவில் நிற்கும்
வாழ்க்கைக்கும்
விடை சொல்லும்
மரணத்துக்கும்- மறு
பிரசுரம் இல்லை.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 11-04-2010

0 comments:

Post a Comment