சோக தேசத்துக்கு
தலைவி நான்.
அழுகையை
அழிக்க
சிரிப்புக்கு-தவம்
செய்கிறேன்.
ஊமை
ரணங்களை விட்டெழாத
உயிர்ப்பு-இன்னும்
உடம்பில்
உலாவருகிறது.
சாய்ந்து கொள்ள
தோள்களைத் தேடினேன்
தேள்கள்-வந்து
அணைத்துக் கொண்டன.
காதல் காட்சியானது
அன்பு அநாதையானது
அடைக்கலமான
கரங்களின்
அரிவாளும்
காதல் வார்த்தைகளில்
கூரிய பற்களும்
சிரித்தன.
கொடுங்கோல்-ஆயுள்
தண்டனை விதித்தாலும்
சமுதாய மரபுக்கு
கண்ணீரை
காணிக்கையாக்குகிறேன்.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 11-04-2010
தலைவி நான்.
அழுகையை
அழிக்க
சிரிப்புக்கு-தவம்
செய்கிறேன்.
ஊமை
ரணங்களை விட்டெழாத
உயிர்ப்பு-இன்னும்
உடம்பில்
உலாவருகிறது.
சாய்ந்து கொள்ள
தோள்களைத் தேடினேன்
தேள்கள்-வந்து
அணைத்துக் கொண்டன.
காதல் காட்சியானது
அன்பு அநாதையானது
அடைக்கலமான
கரங்களின்
அரிவாளும்
காதல் வார்த்தைகளில்
கூரிய பற்களும்
சிரித்தன.
கொடுங்கோல்-ஆயுள்
தண்டனை விதித்தாலும்
சமுதாய மரபுக்கு
கண்ணீரை
காணிக்கையாக்குகிறேன்.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 11-04-2010
0 comments:
Post a Comment