Fathima Naleera. Powered by Blogger.

Sunday, April 11, 2010

முகம் தொலைந்த வாழ்க்கை.. - பாத்திமா நளீரா


சோக தேசத்துக்கு
தலைவி நான்.
அழுகையை
அழிக்க
சிரிப்புக்கு-தவம்
செய்கிறேன்.

ஊமை
ரணங்களை விட்டெழாத
உயிர்ப்பு-இன்னும்
உடம்பில்
உலாவருகிறது.

சாய்ந்து கொள்ள
தோள்களைத் தேடினேன்
தேள்கள்-வந்து
அணைத்துக் கொண்டன.

காதல் காட்சியானது
அன்பு அநாதையானது
அடைக்கலமான
கரங்களின்
அரிவாளும்
காதல் வார்த்தைகளில்
கூரிய பற்களும்
சிரித்தன.

கொடுங்கோல்-ஆயுள்
தண்டனை விதித்தாலும்
சமுதாய மரபுக்கு
கண்ணீரை
காணிக்கையாக்குகிறேன்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 11-04-2010

0 comments:

Post a Comment