பால் நிலாவும்
பள்ளிப் பருவமும்
ஓன்றிணைந்து
இளமைக் கதவை
பூக்கள் தட்டிய
கள்ளம் கபடமில்லா
காலம் அது..
விடியலுக்கு
விழிகளைத்
தூதுவிட்டு
பட்டாம் பூச்சிகளுடன்
இமைகளைச்
சந்திக்க வைப்போம்.
சிரிப்பின் அழகுக்கு
தூரிகைகள் தலைகுனிய
கவிதைகள்
கன்னிகைகளின் -பின்னால்
கைகட்டி நிற்கும்.
இரகசியம் பேசும்
சிறிய…
உதடுகளுடன்
ரோஜா மொட்டுகளுக்கு
என்ன கோபமோ-அவை
விரியாவிட்டாலும்-எங்கள்
இதழ்கள் விரியும்.
கானல் நீரில் கூட
காவியம் படைக்கத் துடிக்கும்
கற்பனைக் கழகம்-மிகுந்த
எங்கள்
பள்ளிப் பருவத்தின்
கிளிமொழிகளும்
கிண்டல்
ஊர்வலங்களும்
உல்லாசமாய்
உப்பரிகையில் அமரும்.
போலி ஒப்பனை இல்லாத
பளபளத்த பருவத்தின்
கண்களில்
கனவுக் காலம் சிறகடிக்க
நட்புக் கரங்கள் கைகோர்த்த
நந்தவன நாட்கள்.
இதயத்திடம்
மண்டியிட்டு – பதிலை
எதிர்பார்த்த
பேனாக்களை ஏளனமாய்
கடந்து வந்த
திமிரான காலம்..
சோகமென்றால்
என்னவென்று தெரியாமல்
சிரித்த காலம்போய்
சிரிப்பு என்றால்
என்னவென்று
கேட்கும் காலம் வந்தது?
எது நிஜமான
காலம்?
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 02-05-2010
பள்ளிப் பருவமும்
ஓன்றிணைந்து
இளமைக் கதவை
பூக்கள் தட்டிய
கள்ளம் கபடமில்லா
காலம் அது..
விடியலுக்கு
விழிகளைத்
தூதுவிட்டு
பட்டாம் பூச்சிகளுடன்
இமைகளைச்
சந்திக்க வைப்போம்.
சிரிப்பின் அழகுக்கு
தூரிகைகள் தலைகுனிய
கவிதைகள்
கன்னிகைகளின் -பின்னால்
கைகட்டி நிற்கும்.
இரகசியம் பேசும்
சிறிய…
உதடுகளுடன்
ரோஜா மொட்டுகளுக்கு
என்ன கோபமோ-அவை
விரியாவிட்டாலும்-எங்கள்
இதழ்கள் விரியும்.
கானல் நீரில் கூட
காவியம் படைக்கத் துடிக்கும்
கற்பனைக் கழகம்-மிகுந்த
எங்கள்
பள்ளிப் பருவத்தின்
கிளிமொழிகளும்
கிண்டல்
ஊர்வலங்களும்
உல்லாசமாய்
உப்பரிகையில் அமரும்.
போலி ஒப்பனை இல்லாத
பளபளத்த பருவத்தின்
கண்களில்
கனவுக் காலம் சிறகடிக்க
நட்புக் கரங்கள் கைகோர்த்த
நந்தவன நாட்கள்.
இதயத்திடம்
மண்டியிட்டு – பதிலை
எதிர்பார்த்த
பேனாக்களை ஏளனமாய்
கடந்து வந்த
திமிரான காலம்..
சோகமென்றால்
என்னவென்று தெரியாமல்
சிரித்த காலம்போய்
சிரிப்பு என்றால்
என்னவென்று
கேட்கும் காலம் வந்தது?
எது நிஜமான
காலம்?
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 02-05-2010
0 comments:
Post a Comment