Fathima Naleera. Powered by Blogger.

Wednesday, December 31, 2014

2014














நிஜத்தை மிதித்த
நிழல்களும்
சமத்துவத்தை எரித்த
இனவாதமும்
வாழ்க்கைகாக அழுத
பூக்களும்
மண்ணில் புதையுண்ட
சரித்திரங்களும்
பசி கரையேற
சதையுண்ட சோகங்களும்
ஆண்டின் இறுதியை
சிறைசெய்த
வெள்ள அனர்த்தமும்
இன்னும் இன்னும்
எத்தனையோ.......
என்றாலும்..சின்ன-சின்ன
சந்தோஷங்கள்
அன்பான
பரிமாறல்கள்
சினேகமான சிரிப்புகள்
என்று 2014 
அஸ்தமித்துக்கொண்டிருக்க
2015 எப்படியோ?
- பாத்திமா நளீரா

0 comments:

Post a Comment