நிஜத்தை மிதித்த
நிழல்களும்
சமத்துவத்தை எரித்த
இனவாதமும்
வாழ்க்கைகாக அழுத
பூக்களும்
மண்ணில் புதையுண்ட
சரித்திரங்களும்
பசி கரையேற
சதையுண்ட சோகங்களும்
ஆண்டின் இறுதியை
சிறைசெய்த
வெள்ள அனர்த்தமும்
இன்னும் இன்னும்
எத்தனையோ.......
என்றாலும்..சின்ன-சின்ன
சந்தோஷங்கள்
அன்பான
பரிமாறல்கள்
சினேகமான சிரிப்புகள்
என்று 2014
அஸ்தமித்துக்கொண்டிருக்க
2015 எப்படியோ?
- பாத்திமா நளீரா
0 comments:
Post a Comment