Fathima Naleera. Powered by Blogger.

Sunday, January 25, 2015

மாதச் சம்பளம்

மணமான புதிதில்
புது மாப்பிள்ளையாய்
மாதச் சம்பளம்
மிடுக்குடன் வந்தது
ஆனால்.. இன்று
யாசகனைப் போல்
யாசித்து நிற்க
குடிமனை கூட
குடிப்பரம்பலைக் கண்டு
எரிச்சல் பட்டுக் கொள்ளும்
   ----------
தீவிரவாதமாக
வளர்ந்து விட்டது வறுமை
கடன்காரனைக் கண்டால்
கவருக்குள்
ஒளிந்து கொள்கிறது
சம்பளப் பணம்!
இதற்கு மட்டும் என்ன
மான, ரோஷம்?
   -----------
குடும்ப அங்கத்தவர்களில்
படிக்காத மேதைகளும்
ஏராளம்!
மனப்பால் குடிக்கும்
கவரிமான்களும்
ஏராளம்!!
பல வடிவங்களில்
மனக் கோட்டைகள்
மனதிலே பதிந்தாலும்
புதுப்பிக்கவென்று
இலட்சியத்துடன்
லட்சமும் இருக்க  வேண்டும்
    --------------
அடுத்த வேளை
உணவுக்குக்  கூட
வயிறு விண்ணப்பிக்க
கடந்து வந்த
வரலாறுகள்
அழிந்து விடுமோ?
   -------------
ஈற்றில்
இறுதிக் கிரியைக்கு கூட
மாதச் சம்பளத்தின்
எச்சில் மிஞ்சுமா..
கேள்விகுறிதான்!


-     - பாத்திமா  நளீரா
  வீரகேசரி வார வெளியீடு 25/01/2015

0 comments:

Post a Comment