Fathima Naleera. Powered by Blogger.

Sunday, March 7, 2010

காதலர் தின சிறப்புக் கவிதை - பாத்திமா நளீரா



எனக்கே
என்னை ஞாபகமில்லை- என்
நினைவு பூராவும்
உடம்பு பூராவும்-உன்
ஞாபகம்- என்ற
போர்வையால்
போர்த்தப்பட்டுள்ளேன்.

பெண்ணே
உன்னை- இல்லை..
என்னை
ஊடுருவிய- அந்த
விகாசம்- மிகுந்த
விழிகளுக்குள்
கைதியான-நாளை
மறக்க முடியுமா?

இதயத்துக்குள்- இவ்வளவு
இந்திர ஜாலமா?


என்
விண்ணப்பத்தை- ஏற்ற
விண்மணியல்லவா நீ?
சரித்திரமாக்கப்பட்ட
சந்தோஷத்தின்
காதலர் தினமே- நீயே
காவியத் தலைவன்.

அஞ்சுகமே- உன்
ஆன்மாவுக்குள்- என்
பருவம்- என்ற
விதை
விருட்சமாகி
இல்லறத்தில் இணைந்த
இந்நாளை
மறக்க முடியுமா?

நம்முள்
அடைக்கலாமான-ஒரே
அன்பளிப்பை
ஆனந்தக் கண்ணீருடன்
அர்ப்பணித்துக் கொண்டோமே
இறுதியில் சொல்கிறேன்.
நம் காதல் வாழ்க்கை
சருகுகள் அல்ல..
சத்தியத்தின்
திறவுகோள்.

மதியே- உன்
அன்பென்ற
ஆளுமையில்
காலம்
காலாவதியானது
தெரியவில்லையே?
இளமை
விடைகொடுக்க
முதுமைக்கு கிடைத்த
அழைப்பிதழ;.
அதனால்தானோ- உன்
அத்தியாயம்
கல்லறைக்குள்
அடைக்கலமானதோ?

இதோ- இந்த
காதலர் தினத்தில்
நீ- தந்த
இதயத்தையும்- என்
கண்ணீhத் துளிகளையும் -உன்
கல்லறையில்
காணிக்கையாக்குகிறேன்.

0 comments:

Post a Comment