Fathima Naleera. Powered by Blogger.

Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Saturday, November 8, 2014

நெருப்பு ஊர்வலத்தில்.. -பாத்திமா நளீரா

வெடித்த நினைவுகளில்
கனத்த காட்சிகள்
படர….என்
கவிதைக்கு….
எல்லாம் இருந்தது
கனவைத் தவிர!
----------------------------
தீண்டத்தகாத
இதயம்
தட்டப்படாத தூசியில்
கண்ணீர் ஓவியமாக
நிலத்தை
முத்தமிட்டன.
சிந்தித்து.. சிந்தித்து
மூளையும் சிலந்தி
வலை  பின்ன
----------------------------

Thursday, August 21, 2014

ஒருநாள் ஊன்றுகோல் கேட்பார்கள்! --பாத்திமா நளீரா













அன்று...
யூதர்களின்..
இரவோடு இரவு
மகாநாட்டின் முடிவின்
வெளிச்சம்!
இன்று
உலகின் மையம்
பலஸ்தீன் இருளானது
========================
அன்றைய
பலஸ்தீனின்
சுதந்திர சுவர்க்கம்
இன்று
இஸ்ரேலிடம் நரகமாய்
தகிக்க...
நெளியும்
யுத்த நாகங்களை
காவல் காக்கும்
அரபு நாடுகளுக்கு
சர்வதேச ஏகாதிபத்தியின்
“புரிந்துணர்வு பட்டம்“
படுக்கையை அலங்கரிக்கிறது.
========================

Sunday, August 17, 2014

எனக்கும் உனக்கும் புரிதலாக மட்டும்...!பாத்திமா நளீரா

விழியும் ஒளியும்
விடிந்தது தெரியாமல்
தூங்கிக் கொண்டிருக்க..
என்
ஆத்மா மாத்திரம்...
===============
ஜடமாகிப் போன
உணர்வுகள்
மூப்படைந்த முறுவலாய்
இதழ் சுருங்க...
===============
சிநேகிதம் – தந்த
சிரிப்புகள்
சீவனற்ற
சுவாசமாய்
சுயசரிதை எழுத
என் பேனா
நடைப்பிணமானது...

===============

Thursday, March 20, 2014

காவல் காக்கும் ஓநாய்கள்! -பாத்திமா நளீரா

மெல்ல..மெல்ல
விஷங்கள் விலாசமிட
நாகங்களுக்கு நடிப்பு
சொல்லிக் கொடுக்கவென
மாமனிதர்கள்
விரைய...........
-----------------------------
திரண்ட சக்திகள்
தார்மிக விழுமியங்களின்
கால்களை உடைக்கவென
தரணியில் வலம் வர.....

Sunday, March 9, 2014

தாய்க்கு ஒரு கவளம் சோறு! -பாத்திமா நளீரா

என்
ஒடுங்கிப் போன
நிழலுக்குள்ளே – நான்
முடங்கிக் கொள்கிறேன்.
மகனே...
உன்னைப் பிரசவித்த
வேதனையை விட
நீ
உதைக்கின்ற வார்த்தைகளால்
உயிரில் உதிரம்
கொட்டினாலும் – ஓர்
உவகைதான்
என்ன அழகாக
பேசுகிறாய்.

Sunday, November 10, 2013

உரிமைக்கு உருவம்

- பாத்திமா நளீரா

பொய்கள்..
பொய்த்துப் போன
பொழுதுகளில்
புழுதிகளைப் புசித்து
பூர்வீகத்தில் புகலிடம்
கேட்டவர்களுக்கு
வன்முறை
வாரிசாக்கப்பட்டது.
==================
மனிதனுக்கு
ஞானம் வர
துப்பாக்கி தூக்கில்
தொங்குமா?
இவர்களின
அகோரத் தாண்டவத்திற்கு
புற்களும்
கொலை செய்யப்படுகின்றன.
==================

Friday, September 13, 2013

மீடியா

பாத்திமா நளீரா
ஊடகம்..
மூச்சு விட்டால்
எழுச்சியும் புரட்சியும்
முகமும் முகவரியுமாக
உருப்பெறும்
------
மீடியா“ – என்ற
சாம்ராஜ்யம்
ஆக்கத்துக்கும்
அழிவுக்கும் ஆத்மாவாக
சத்தியம் செய்யப்பட்டது.

Monday, March 18, 2013

கால்களுக்கு நடுவில் சுவர்கள்… - பாத்திமா நளீரா

புதிய ஜாதகங்களுக்கு
சட்டம் போட்டு
புறவுரை – எழுதும்
இவர்களின்
எச்சில்களும் கற்களும்
குழுக்களிடையே
கூட்டம் போட்டு
குரைக்க..
பொறுமை – என்ற
சிறைக்குள் – நாமே
சிறைப்பட்டுக் கொண்டோம்!

Sunday, December 23, 2012

முடிவில் முகத்தைத் தேடினேன்.... பாத்திமா நளீரா


பூக்களின் பனியுடன்
எண்ணங்களின்
குளிர்ச்சியையும்
தூது விட்டேன்
ஆனால்...
சாம்பல் தூவி
வரவேற்ற – ஒரே
பெண் நீதான்.
++++++

Saturday, December 1, 2012

காஸாவின் கால்களைப் பிடிப்பார்கள்.. பாத்திமா நளீரா


மனிதனைத் தின்று
மனிதம் வாழ
அவசர கூட்டங்களும்
அவசர அறிக்கைகளும்
ஊடகங்களின்
வெளிச்சத்துக்கு...!
உயிரற்ற உடல்களுக்கு
உணவுப் பொட்டலங்கள்
வீசித்தான் என்ன பயன்?
என்றாலும்..

Friday, October 26, 2012

ஏழை எங்களுக்கே முதலிடம்...


ஹஜ்ஜுப் பெருநாள்
சிரிக்கிறது
ஹஜ்ஜாஜிகள் கூட்டம்
செழிக்கிறது.
சந்தோஷத்தைக் கொண்டாட
காசுக்குத்தான்
‘கல்பு“ (மனம்) இல்லாமல்
காய்ந்து போயுள்ளது.
        ====
வருடந்தோறும்
ஹஜ் பட்டம்பெறும்
வசதி வர்க்கத்தினரே
சற்று நின்று…
பட்டினிக்குப்
பட்டியலிடும்

Thursday, June 28, 2012

சொந்த வீட்டின் சோற்றுக் கைதிகள்! -பாத்திமா நளீரா



இவர்கள்
பூரணத்துவம்
பெற்றவர்களாக
இன்னுமொரு – பூமியை
படைக்கிறாரகள்.
நாங்களோ..
சுதந்திர நாட்டின்
அடிமை வாரிசுகளாக
அபராதம்
கட்டிக் கொண்டிருக்கிறோம்..

Saturday, February 18, 2012

அக்கினியில் குளிக்கும் நிலவு - பாத்திமா நளீரா


பெண்ணே – நீ
நிலவுதான்
ஆனால் – உன்
மண வாழ்வில்தான்
மந்தமாருதம் இல்லை.
தினந்தோறும்
அக்கினியில் குளிக்கிறாயே?

நீ…..

மெழுகுவர்த்திதான்
ஆனால்..

Sunday, October 23, 2011

ஒரு நாள் அலாரம்…- பாத்திமா நளீரா


அதிகாலையில் அலறிய 
அலாரம்
தூங்கியது போதும்!
எழும்பு… என்று
எச்சரித்தது.
ஐந்து நிமிடம் 
ஒத்திவைத்தேன் – அப்படியொரு
நித்திரை சுகம்!
நீடித்தது.
திடுக்கிற்று எழுந்தேன்

Wednesday, June 1, 2011

உன் சிரிப்புக்கு நான் அடிமை -பாத்திமா நளீரா


மணியே...!
மாதுளம் முத்துக்கள்
உதிக்காத-உன்
சிரிப்பின்
நுழைவாயிலில்
நிலவு ஒளிந்துள்ளதா?
--------
உனக்காக- ஒரு
புதிய
அகராதியை ஆராதனை
செய்யப் போகிறேன்.
பரிமளம் தவழும்- உன்
பனி பூத்த
பொக்கை வாய்க்கு- எந்த
பொக்கிஷத்தால்

Saturday, October 9, 2010

IIFFA ஐஃபா - பாத்திமா நளீரா


ஐஃபா (IIFFA)
சுவாசித்த காற்று
நம்பக்கமும் வீசுமா?
பாய்போட்டு
படுத்த பட்டினி
பரிதவித்துக் கேட்கிறது.

கண்ணீரில் உப்பில்லை
இரத்தத்தில் நிறமில்லை
உயிருக்கு -உணவு
ஊதியம் கேட்க
உணவுக்கு -விலைவாசி

இவனின் விடை…? பாத்திமா நளீரா


Drugs- இந்த
போதையின்
சிறையில் சிக்கி
விழிகளைத் தொலைத்து
வானத்தைத் தேடும்
இவன்..
புதைந்து சென்ற
வாழ்க்கையை வனத்தில்
தோண்டுகிறான்.

இவன்
முகத்தில் முன்னூறு
வேஷங்கள்..
சிந்தனையில் நானூறு

கால் பதித்த தடயங்கள்..பாத்திமா நளீரா



எனக்கே
என்னை ஞாபகமில்லை- என்
நினைவு பூராவும்
உடம்பு பூராவும்-உன்
ஞாபகம்- என்ற
போர்வையால்
போர்த்தப்பட்டுள்ளேன்.

பெண்ணே
உன்னை- இல்லை..
என்னை
ஊடுருவிய- அந்த
விகாசம்- மிகுந்த
விழிகளுக்குள்
கைதியான-நாளை
மறக்க முடியுமா?

Sunday, August 8, 2010

மனிதனும் வாழ்க்கையும் பாத்திமா நளீரா

வாழ்க்கை!
இறைவன் கொடுத்த
அரிய வரம்.
மனிதா-நீ
யதார்த்தங்களின்
இருப்பிடத்தை
மறந்துவிட்டு
நிழல்களின்
தரிப்பிடத்துக்கு ஓடுகிறாய்..

நீ
சிரிக்காமலே
ஒளியைத் தேடுகிறாய்
வாழாமலே
நாட்களைத் திட்டுகிறாய்

Wednesday, August 4, 2010

தீயின் வினாவும் பூவின் விடையும் - பாத்திமா நளீரா



இரவின் மடிக்கு
தூது செல்லும்
தூக்கத்தினைத் தூரமாக்குகிறேன்.
தூசுபடிந்த…
நினைவுகளைத் தட்டி
நிபந்தனையுடன்
நியமிக்கிறேன்.

கனவில் பார்த்த
கண்ணாடி..
கட்டாரியானதால்
காயம்பட்ட காயத்திலிருந்து
கவிதை எழுகிறேன்.