Fathima Naleera. Powered by Blogger.

Sunday, August 17, 2014

எனக்கும் உனக்கும் புரிதலாக மட்டும்...!பாத்திமா நளீரா

விழியும் ஒளியும்
விடிந்தது தெரியாமல்
தூங்கிக் கொண்டிருக்க..
என்
ஆத்மா மாத்திரம்...
===============
ஜடமாகிப் போன
உணர்வுகள்
மூப்படைந்த முறுவலாய்
இதழ் சுருங்க...
===============
சிநேகிதம் – தந்த
சிரிப்புகள்
சீவனற்ற
சுவாசமாய்
சுயசரிதை எழுத
என் பேனா
நடைப்பிணமானது...

===============

கவிபாடும் காற்று
கூலிக்கு
கைமாறியதால்
எண்ணங்களும்
வண்ணங்களும்
நந்தவனங்களும்
நட்சத்திரங்களும்
புயலாய் தாக்கி
மறைய...

===============

பல வருடங்களாய்
ஊன்றி நின்ற
கால்களில்
கறையான்கள்
அணிவகுத்து
படையெடுக்க..

===============

விழிகளில்
காவல் காத்த
இல்லத்துக்கு
நிரந்தர ஓய்வு
தேவைப்பட்டதோ?

===============

பலவற்றின் இழப்பில்
சிலவற்றின் வெற்றி
இடைவெளி
ஓய்வுக்குள்
ஒருமைப்பாடு
ஓலமிடுகிறது..

===============

மனம் தந்த
மனையே...
இறுதியில் – நீ
மறக்கடிக்கப்பட்டு
விட்டாயோ?

இது உனக்கும்
எனக்கும்
மட்டுமே புரியும்


நன்றி : வீரகேசரி வாரவெளியீடு 17-08-2014)

0 comments:

Post a Comment