விழியும் ஒளியும்
விடிந்தது தெரியாமல்
தூங்கிக் கொண்டிருக்க..
என்
ஆத்மா மாத்திரம்...
===============
ஜடமாகிப் போன
உணர்வுகள்
மூப்படைந்த முறுவலாய்
இதழ் சுருங்க...
===============
சிநேகிதம் – தந்த
சிரிப்புகள்
சீவனற்ற
சுவாசமாய்
சுயசரிதை எழுத
என் பேனா
நடைப்பிணமானது...
===============
விடிந்தது தெரியாமல்
தூங்கிக் கொண்டிருக்க..
என்
ஆத்மா மாத்திரம்...
===============
ஜடமாகிப் போன
உணர்வுகள்
மூப்படைந்த முறுவலாய்
இதழ் சுருங்க...
===============
சிநேகிதம் – தந்த
சிரிப்புகள்
சீவனற்ற
சுவாசமாய்
சுயசரிதை எழுத
என் பேனா
நடைப்பிணமானது...
===============
கவிபாடும் காற்று
கூலிக்கு
கைமாறியதால்
எண்ணங்களும்
வண்ணங்களும்
நந்தவனங்களும்
நட்சத்திரங்களும்
புயலாய் தாக்கி
மறைய...
===============
பல வருடங்களாய்
ஊன்றி நின்ற
கால்களில்
கறையான்கள்
அணிவகுத்து
படையெடுக்க..
===============
விழிகளில்
காவல் காத்த
இல்லத்துக்கு
நிரந்தர ஓய்வு
தேவைப்பட்டதோ?
===============
பலவற்றின் இழப்பில்
சிலவற்றின் வெற்றி
இடைவெளி
ஓய்வுக்குள்
ஒருமைப்பாடு
ஓலமிடுகிறது..
===============
மனம் தந்த
மனையே...
இறுதியில் – நீ
மறக்கடிக்கப்பட்டு
விட்டாயோ?
இது உனக்கும்
எனக்கும்
மட்டுமே புரியும்
நன்றி : வீரகேசரி வாரவெளியீடு 17-08-2014)
0 comments:
Post a Comment