Fathima Naleera. Powered by Blogger.

Tuesday, March 24, 2015

முற்றுப்புள்ளி - பாத்திமா நளீரா











உலகத்திலேயே...
சிறந்த மொழி

அம்மா என்றேன்.
தாய்மை சிரித்தது
உலகை வென்ற
மொழியும் அதுதான்
என்றது.
-----------
மகிழ்ச்சியின் வடிவம்
உலகம் என்றேன்
உலகம் சொன்னது
நானே....
அழிந்து கொண்டிருக்கிறேன்
என்றது.
-----------
இயற்கையின் காதலில்
இதயத்தைக் கேட்டேன்
மனிதர்கள்
விற்று விட்டார்கள்
என்றது.
------------
அடிவானத்திடம் சூரியனை
சிறை பிடிப்பேன்
என்றேன்
வானம் சிரித்தது
முடிந்தால்....
ஒரு மழைத் துளியை
பிடித்துப்பார்
என்றது.
---------------
மூப்பு
வயதின் கௌரவம்
என்றேன்
முதுமை அழுதது
பிறப்பின் ஆரம்பசாபம்
என்றது.
-------------
அழிவின் முகம்
எதுவென்று கேட்டேன்
யுத்தத்தின் நாக்கு
என்றது
------------
இறுதியில்...
மரணத்தை ஓவியமாக
வரைய வேண்டுமென்று
விதியிடம் கேட்டேன்
'நான் மிதிக்கும் போது
நீ இருக்க மாட்டாய்'
என்று—எனக்கு
முற்றுப்புள்ளி வைத்தது.

- பாத்திமா நளீரா 

0 comments:

Post a Comment